நினைச்சு நினைச்சு சோந்து போனது மனசு,
நினச்சது ஒன்னு நடப்பது ஒன்னு !
எட்டிப்பாத்தா கிட்ட நின்னது தூரதெரியுது
மடிச்சு வக்க மனசு ஒன்னும் வேட்டி இல்லையே!!
மறத்துப்போன மனசோட
மனசில்லா மனுசங்களோட,
கூடி வாழ இங்க பொறந்துட்டோம்.
விட்டுகொடுத்தா கெட்டுப்போகாதுன்னு
பெரியவங்க சொல்லிவச்ச வாய்ப்பாட்ட
தெனந்தென சொல்லிக்கிறேன்.
ஏமாத்த இங்க நிறைய பேறு- ஏமாற
நான் மட்டும் தானா?
ஏமாந்தது நான் மட்டும் தானா?
மனசுக்குள்ளே மருகுறேன்.
கிட்ட வர மனுசங்கக் கிட்ட ஒன்னும் இல்ல
தானா செரியாகும்கிறேன். ஆனா என்
மனசுக்கு எதுவும் சரியில்லே.
கஷ்டப்பட்ட மனசுக்கு ஆறுதலா ஒரு விஷயம்,
நான் ஏமார்றது என் சொந்த பந்தத்துகிட்ட தானே ?
கூடிக்களிச்சக் கூட்டாளிங்கட்ட தானே ?
என்னதான் என்னத்தேத்திக்கிட்டாலும், நான்
எல்லாத்துகிட்டையும் தான் ஏமாந்து இருக்கேன்!!
நினைச்சு நினைச்சு சோந்து போனது மனசு!!
நினச்சது ஒன்னு நடப்பது ஒன்னு !
எட்டிப்பாத்தா கிட்ட நின்னது தூரதெரியுது
மடிச்சு வக்க மனசு ஒன்னும் வேட்டி இல்லையே!!
மறத்துப்போன மனசோட
மனசில்லா மனுசங்களோட,
கூடி வாழ இங்க பொறந்துட்டோம்.
விட்டுகொடுத்தா கெட்டுப்போகாதுன்னு
பெரியவங்க சொல்லிவச்ச வாய்ப்பாட்ட
தெனந்தென சொல்லிக்கிறேன்.
ஏமாத்த இங்க நிறைய பேறு- ஏமாற
நான் மட்டும் தானா?
ஏமாந்தது நான் மட்டும் தானா?
மனசுக்குள்ளே மருகுறேன்.
கிட்ட வர மனுசங்கக் கிட்ட ஒன்னும் இல்ல
தானா செரியாகும்கிறேன். ஆனா என்
மனசுக்கு எதுவும் சரியில்லே.
கஷ்டப்பட்ட மனசுக்கு ஆறுதலா ஒரு விஷயம்,
நான் ஏமார்றது என் சொந்த பந்தத்துகிட்ட தானே ?
கூடிக்களிச்சக் கூட்டாளிங்கட்ட தானே ?
என்னதான் என்னத்தேத்திக்கிட்டாலும், நான்
எல்லாத்துகிட்டையும் தான் ஏமாந்து இருக்கேன்!!
நினைச்சு நினைச்சு சோந்து போனது மனசு!!
No comments:
Post a Comment