விடிந்த பின்னும் போராட்டம் :--
******************************
விளக்கு வெச்சப் பின்னாடி வலைய எடுத்துப் போனாண்டி,
இருட்டுகுள்ளே அவன் நுழைஞ்சி - போன பாத மறைஞ்சதடி.
வீட்டுக்குள்ள மனுசரெல்லாம் -குல சாமிய வேண்டிகிடக்க,
இருட்ட மட்டும் துணையாக்கொண்டு துடுப்பெடுத்து போனானே!,
கடல் அலையோட மல்லுக்கட்டி, தன் வவுத்துப்பாட்ட போக்க,
எல்ல தெரியாக் கடலுக்குள்ளே ,கண் விழிச்சு உழைச்சாண்டி.
இராப்பூரா தனிச்சிருந்து, விடியுமட்டும் உழைச்ச அவன்-
உயிரோட வந்தாலும் , தேவை மட்டும் தீரயில்ல.
சிக்காத மீனத்தேடி தொல தூரம் போன பின்ன, -எல்லை
தாண்டி வந்தவன்னு கொண்டுபோக ஆளு ரெடி.
விடிஞ்ச பின்ன சூரியனின் வெப்பமும் சுட்டுத்தாக்க,
கிடைச்சவர போதுமின்னு வந்தவன் தான் கரையில !!
- கணேசன்
******************************
விளக்கு வெச்சப் பின்னாடி வலைய எடுத்துப் போனாண்டி,
இருட்டுகுள்ளே அவன் நுழைஞ்சி - போன பாத மறைஞ்சதடி.
வீட்டுக்குள்ள மனுசரெல்லாம் -குல சாமிய வேண்டிகிடக்க,
இருட்ட மட்டும் துணையாக்கொண்டு துடுப்பெடுத்து போனானே!,
கடல் அலையோட மல்லுக்கட்டி, தன் வவுத்துப்பாட்ட போக்க,
எல்ல தெரியாக் கடலுக்குள்ளே ,கண் விழிச்சு உழைச்சாண்டி.
இராப்பூரா தனிச்சிருந்து, விடியுமட்டும் உழைச்ச அவன்-
உயிரோட வந்தாலும் , தேவை மட்டும் தீரயில்ல.
சிக்காத மீனத்தேடி தொல தூரம் போன பின்ன, -எல்லை
தாண்டி வந்தவன்னு கொண்டுபோக ஆளு ரெடி.
விடிஞ்ச பின்ன சூரியனின் வெப்பமும் சுட்டுத்தாக்க,
கிடைச்சவர போதுமின்னு வந்தவன் தான் கரையில !!
- கணேசன்

No comments:
Post a Comment