Sunday, July 26, 2015

தனிமை : --
*********


தனித்தியங்குவது சிந்தனைக்கு வித்திடும்,
சிந்தனை சிறக்க சூழல் துணை செயும்.
வெட்டிச்சிந்தனை விழலுக்கிறைத்த நீராகும்.

தனித்தியங்குவது தன்னிலை உணர்விற்கும்,
தன்னுள் ஒடுங்குவது-
வாழ்வியல் உயர்விற்கும் துணையாகும்.

தனிமை வெறுப்போர்- "அவர் வழி பொது வழி" ,
கூடீயிருப்போர், சேர்ந்து களிப்போர்,
விரும்பிச் சேர்வது வெற்றீயின் மேல் படி.

வென்றோர் தோள் தட்டியும்,
வீழ்ந்தோர் தோள் அணைத்தும் - துணையிருப்பது,
சூழ்ந்தோர் மன நிலை.


 காடு என்றால் - தவம் !
வீடு என்றால் - சுகம் !
தேடு ஒண்றை -- தினம் !.....

No comments:

Post a Comment