Sunday, July 26, 2015

விட்டில் பூச்சியும், பட்டுப் பூச்சியும்..
*************************************

இறந்து பட்ட இரு புழுக்கள் பேசிக்கொண்டன..
இறந்து படுதல் நமக்கு ஒன்றும் புதிது அல்லவே,

பட்டு பளபளக்க நான் இங்கு உயிரை விடுகிறேன் - நீயோ ?
சுடரின் பளபளப்பைக் கண்டுவிட்டு உயிரை விடுகிறாய்.

விட்டிலுக்கு வந்த கோபம் துரிதமானது..- உடன்
பட்டிடம் கேட்டதங்கே கோபமாக அது!

ஓளி கண்டு வீழும் என்னை யாரும் கொல்வதுமில்லை., -
உன்னை வளர்த்து இங்கு சுடு நீரில் இட்டுக் கொல்வருமுண்டு,

துளிர்ந்து விட்ட விழி நீர் துடைத்து பட்டு கேட்டது.-தியாகத்தில்
உயிர்த் தியாகத்தில் நம்மிடையே பேதம் இல்லையா ?

நான் சென்ற பின்னும் பட்டென என் பேரும் நிற்குமே- ஆயின்
பொருளில்லா தியாகம் உந்தன் உயிருமல்லவா ?

வாதத்திற்கு உகந்த வார்த்தை கொண்டன இரண்டும் - இதுபோல்
மனிதருள்ளும் வீண் தியாகம் , வெறும் வார்த்தை இருப்பதுமுண்டு.

விட்டில் அதன் தியாகம் இண்றேல் ஒளியுமில்லையா?
பட்டு இல்லா வாழ்வதிலே பெருமை இல்லையா?

வெட்டித் தியாகம் வீண் தியாகம் வேண்டாம் இங்கே!- மாந்தருள்ளும்
உயிர்த் தியாகம் உயர்த்தியாகம் போற்றுவோர் உண்டு.

எத்தகைய தியாகம் என்று உணர்ந்தோர் செயலே-
உயர்த்தி இங்கு பேசப்படும் பெரியோர் நடுவே!
                                                                                  

No comments:

Post a Comment